Saturday, June 25, 2022

ஆசிரியர்களுக்காக பயிற்சியா..... பயிற்சிக்காக ஆசிரியர்களா....

        

கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிப்பது என்பது புதிது அல்ல.   

இது எல்லா காலக் கட்டங்களிலும் நடைமுறையில் இருந்த ஒன்றுதான், ஆனால் அன்றைய பயிற்சிக்கும் இன்றைய பயிற்சிக்கும் உள்ள வேறுபாடுதான் மிகப்பெரியது.

ஆம், அன்று அளிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்களுக்கானது. இன்றோ பயிற்சிக்காத்தான் ஆசிரியர்கள்.

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, மாணவர்களின் கற்றல் மேம்படச் செய்ய வேண்டும் என உரிய பாட ஆசிரியகளுக்கு உரிய பயிற்சிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டது.

இன்றோ வழங்கப்படும் பயிற்சியில், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பயிற்சி என்பது உரிய பாட ஆசிரியகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதை விடுத்து பாடம்/வகுப்பு  சம்பந்தமே இல்லாத எவறாவது கலந்துக்கொண்டு பயிற்சியாளர் எண்ணிக்கை நிறைவு செய்தால் போதுமானது என்ற நிலைக்கு வந்தாயிற்று. 

இப்படி வழங்கப்படும் பயிற்சிகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கல்வித் துறைக்கே வெளிச்சம்.

தற்போது வழங்கப்படும் எல்லாப் பயிற்சிகளிலும் முதன்மை செயல்பாடாக இருப்பது பயிற்சியாளர்கள் எண்ணிக்கை நிறைவு செய்வது மட்டுமே.

இதன் விளைவு தேவை இல்லாத பயிற்சிகள் தேவை இல்லாதவர்களுக்கு போய் சேர்வது மட்டுமல்லாமல், அவர்களின் வகுப்பு மாணவர்களுக்கும் கற்றல் கால இழப்பு ஏற்படுகிறது....

உரியவர்கள் உரிய முறையில் சிந்தித்து, உரியவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கிட முன்வர வேண்டும்....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0