அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா பிறந்த நாள் விழா...
ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.06.2026 அறிவியல் தமிழின் முன்னோடி, அறிவியல் தமிழின் தந்தை ஐயா மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடந்த நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், பூ. இராம்குமார், ரா. ஜீவா, கணினிப் பயிற்றுநர் ச. மரகதம் ஆகியோரும் மாணவர்களும் கலந்துக் கொண்டனர். தலைமை ஆசிரியர் தமது உரையில் மணவை முஸ்தபா அவர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழில் அறிவியல் கருத்துக்களை வெளிப்படுத்திய அவரின் திறன், அவர் தமிழில் உருவாக்கித் தந்த முதல் சிறுவர் கலைக்களஞ்சியம், மற்றும் அவரின் தமிழ்ப்பணி, அவர் எழுதிய நூல்கள், தமிழ் நாடு அரசு மற்றும் பிற துறைகள் அவர்க்கு வழங்கிய விருதுகள், ஆகியவை பற்றியும், அவரின் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார்.
















