Wednesday, June 26, 2024

ஊத்தங்கரையில் புத்தகக் கண்காட்சி.....

புத்தகக் கண்காட்சி துவக்கவிழா...... ஊத்தங்கரை செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று (25.06.2024) ல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன புத்தகக் கண்காட்சி துவங்கியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கவிழா இன்று ஊத்தங்கரை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஊத்தங்கரை தமிழ்ச்சங்க துணைச் செயலாளரும் மூத்த கவிஞருமான இ. சாகுல் அமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக மண்டல மேலாளர் அரிமா நூருல்லா செரீப் அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் திரு எஸ். முரளிதரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் கவி. செங்குட்டுவன், லோகநாதன் சேகர், சித. வீரமணி, பழ. வெங்கடாசலம், நா. இராமமூர்த்தி, அவ்வை சுரேஷ், எழுஞாயிறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வே. கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் கிளை மேலாளர் இரா. தியாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். கண்காட்சியில் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவனின் நூல்கள் உள்ளிட்ட கவிதை, கட்டுரை, சுய முன்னேற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சிறுவர் நூல்கள், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக நகரும் ஊர்திகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம் தற்போது அரங்கில் காட்சிப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குறியது.

Saturday, June 25, 2022

ஆசிரியர்களுக்காக பயிற்சியா..... பயிற்சிக்காக ஆசிரியர்களா....

        

கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிப்பது என்பது புதிது அல்ல.   

இது எல்லா காலக் கட்டங்களிலும் நடைமுறையில் இருந்த ஒன்றுதான், ஆனால் அன்றைய பயிற்சிக்கும் இன்றைய பயிற்சிக்கும் உள்ள வேறுபாடுதான் மிகப்பெரியது.

ஆம், அன்று அளிக்கப்பட்ட பயிற்சி ஆசிரியர்களுக்கானது. இன்றோ பயிற்சிக்காத்தான் ஆசிரியர்கள்.

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, மாணவர்களின் கற்றல் மேம்படச் செய்ய வேண்டும் என உரிய பாட ஆசிரியகளுக்கு உரிய பயிற்சிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டது.

இன்றோ வழங்கப்படும் பயிற்சியில், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பயிற்சி என்பது உரிய பாட ஆசிரியகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதை விடுத்து பாடம்/வகுப்பு  சம்பந்தமே இல்லாத எவறாவது கலந்துக்கொண்டு பயிற்சியாளர் எண்ணிக்கை நிறைவு செய்தால் போதுமானது என்ற நிலைக்கு வந்தாயிற்று. 

இப்படி வழங்கப்படும் பயிற்சிகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கல்வித் துறைக்கே வெளிச்சம்.

தற்போது வழங்கப்படும் எல்லாப் பயிற்சிகளிலும் முதன்மை செயல்பாடாக இருப்பது பயிற்சியாளர்கள் எண்ணிக்கை நிறைவு செய்வது மட்டுமே.

இதன் விளைவு தேவை இல்லாத பயிற்சிகள் தேவை இல்லாதவர்களுக்கு போய் சேர்வது மட்டுமல்லாமல், அவர்களின் வகுப்பு மாணவர்களுக்கும் கற்றல் கால இழப்பு ஏற்படுகிறது....

உரியவர்கள் உரிய முறையில் சிந்தித்து, உரியவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கிட முன்வர வேண்டும்....

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0