Sunday, June 26, 2011

கிருஷ்ணகிரி தமிழ் இணையப் பயிலரங்கம்



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை சரியாக 10 மணிக்கு தமிழ் இணைபயிலரங்க நிகழ்வுகள் துவங்கியது. முதல் நிகழ்வாக கவி. செங்குட்டுவன் அவர்கள் இந்நிகழ்வு நடத்துவதன் அவசியம் மற்றும் நடத்துவதற்கான சூழல் ஆகியவை பற்றி எடுத்துக்கூறி அறிமுக உரை நிகழ்த்தினார். முன்னதாக சிங்கப்பூரில் இருந்து பழனியப்பன் அய்யா அவர்கள் இணையம் மூலம் நிகழ்வுக்கான வாழ்த்துரை வழ்ங்கினார். பின்னர் துரை.மணிகண்டன் அவர்கள் தமிழும் கணினியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் அவர் கணினியில் தமிழ் வளர்ந்த வரலாற்றுச் செய்திகளையும், இணையத்தில் தமிழ் வளர்ந்த செய்திகளையும் அதற்கு தமிழ்

இணைய மாநாடுகள் எவ்வகையில் உதவியது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தார். இடையில் திரு மா.சிவக்குமார் அவர்கள் தமிழ் எழுத்துக்கள் உருவான விதம் பற்றிக் கூறினார். அடுத்து திரு ஒரிசா பாலு அவர்கள் தமது கடலாய்வு அனுபவங்களை படக்காட்சிகளுடன் விவரித்தார். மேலும் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, பரவல் மற்றும் தமிழர் தொன்மை ஆகியவை பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார். அதற்கடுத்ததாக திரு சரவணன் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் கணினியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும், அதற்கான

சிறப்பு சாப்ட்வேர்களான ஜாஸ், ஈ ஸ்பீக்,என்விடிஏ ஆகியவை பற்றியும் தெளிவாகக் கூறினார் இத்தோடு காலை நிகழ்வுகள் நிறைவடைந்தது.

                  பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு துவங்கிய பிற்பகல் அமர்வில் திரு மா.சிவக்குமார் அவர்கள் மின்னஞ்சல் மற்றும் வலைப்பூ துவக்குதல் ஆகியவை பற்றி சிறப்பாக விளக்கியும் பார்வையாளர்களுக்கு நேரிடையாக செய்முறைப் பயிற்சியும் அளித்தது அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. அடுத்து கவி செங்குட்டுவன் மற்றும் துரை.மணிகண்டன் ஆகியோர் மின்நூலகம் பற்றி விளக்கினர் அதில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் போன்ற மின்நூலகங்கள் பற்றியும் அவற்றின் சேகரிப்பு பயன்பாடு பற்றியும் விரிவாகக் கூறினர்,
                         இறுதியாக பங்கேற்பாளர்களின் கருத்துரை மற்றும் பின்னூட்டம் வரவேற்கத்தக்கதாக அமைந்தது.
                    இந்நிகழ்வில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மற்றும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஆகியவற்றின் முதுகலைத் தமிழ் மாணவர்கள் முழுமையாகக் கலந்துக்கொண்டமையும், மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாமைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலர்கள் முழுமையாகப் பங்கு பெற்றமையும் பாராட்டுக்குறியது.


















Sunday, May 9, 2010

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

tamil-inaiya-payilarangam@googlegroups.comtamil-inaiya-payilarangam@googlegroups.comசாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான்பாரதி. இக்கூற்று பாரதி வாழ்ந்த காலதில் அவன் கண்ட சமூகஅவலங்களின்  வெளிப்பாடு. மேலும் அன்று சாதிகள் பலநூறுஇருந்திடினும் சமுதாயத்தில்வெளிப்பட்டது மேல்சாதி, கீழ்சாதி எனும்இரு பிரிவுகள் மட்டுமே. ஆனால்இன்று நாட்டில் உள்ள அனைத்து சாதிகளும் தத்தம் சாதியினரின் எண்ணிக்கையை வெளிக்காட்டி அதை தமது பலமாகக் காட்டிடும் அவலமே அரங்கேறி வருகிறது. இதன் காரணமாகத்தான் இன்று அரசியல் போர்வை போர்த்திக்கொண்டுள்ள பல சாதித் தலைவர்களும் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை கோருகிறாகள்.
உண்மையிலேயே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலம் நாடுவோர் கேட்க வேண்டியதுசாதிமதங்களைக் கடந்த பொருளாதாரக் கணக்கெடுப்பே. இதன் மூலமே அடித்தட்டுமக்களின் எண்ணிக்கைக்கேற்ற வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டி நாட்டைமுன்னேற்றப் பாதைக்கு வழி நடத்திட முடியும்.

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

Friday, January 29, 2010

நிகர் நிலைப் பல்கலை கழக அங்கீகார இரத்து.

இன்று போதிய வசதிகள் இல்லை என்று கூறி 44 நிகர் நிலைப்பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையை பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். ஆம் இந்த நிகழ்வு எப்படி நிகழ்ந்தது, இது நிகழக் காரணமானவர் யார்? அங்கீகாரம் வழங்கிய யூஜிசி எனும் பல்கலைகழக மானியக் குழுவா? அரசாங்கமா? அல்லது அதில் படிக்கும்
மாணவர்களா?        இவர்களில் யாருமே இல்லை ஓர் பொதுநல வாதியின்
விண்ணப்பம்தான். இந்த பொது நலவாதி பிரச்சனையாக்காமல் இருந்திருந்தால் சம்மந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் இன்றைய நிலை ஓகோ என்று சொல்ல வைத்திருக்கும். அப்படியானால் இத்தகு கல்வி நிறுவணங்களை அரசும்,அதிகாரிகளும் தொடர் ஆய்வு பல நூறு கோடி ருபாய் கல்வி மேம்பாட்டுப்பணிகளுக்கென நிதி உதவி வழங்கியுள்ளதே எப்படி?  சரியான ஆய்வைமேற்கொள்ளாமல் அங்கீகாரமும் வழங்கிவிட்டு, அரசு நிதி உதவிகளும்செய்துவிட்டு, அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களையும் சேர்த்துவிட்டு இன்றுஏதோ புதிதாக கண்டுபிடித்து விட்டதாகக் கூறி கூக்குரலிடுவது ஏன்? தற்போதுபாதிக்கப்படுவது யார்? அதில் பயிலும் அப்பாவி மாணவர்களும் அவர்தம்பெற்றோர்களும் அல்லவா. இதற்கெல்லாம் காரணமானவர்களை தண்டிப்பது யார்?எப்போது? எப்படி? இதுவே தற்போது நம்முன் உள்ள வினா, விடை கிடைக்குமா?

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

Sunday, January 17, 2010

வணக்கம்!

நாட்டில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் பல, அவற்றில் சரியானவை சில சரியானவையாக ஏற்றுக்கொள்ளப்படுபவை பல. அதைகைய நிகழ்வுகளை குறித்த எனது எண்ணக் கருத்துக்களை வெளியிடவே இப்புதிய வலைப்பூ.
வாரீர் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்வோம்.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0